Skip to content
TCW Songs

Artist

Rev. Dr. S. Justin Prabakaran

Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன்

64 songs

பெயர்: ரெவ. டாக்டர். எஸ். ஜஸ்டின் பிரபாகரன் பிறந்த தேதி (DOB): 09.06.1950 பிறந்த இடம்: கீழ்கவரப்பட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா தந்தையின் பெயர்: காலம் சென்ற போதகர் சிகாமணி (ஆற்காடு லுத்தரன் திருச்சபை) மரண தேதி (DOD): ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் போதகரான காலம் சென்ற போதகர் சிகாமணியின் புதல்வர் Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன், கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டில் பிறந்து வளர்ந்தவர் 09.06.1950. மருத்துவ பட்டதாரியான காலம் சென்ற 22.04.1990 சகோதரர் SIP 9 ஆண்டு இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டார். 1982ம் ஆண்டு ஊழியத்தில் அடியெடுத்து வைந்தார். கிறிஸ்தவத்தின் அதாரச்சான்றுகள்,கடைசி கால செய்திகள் என்ற தலைப்பிலும் இவர் இதமுழக்க படைமுயற்சி கூட்டங்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஆற்றிய உரைகள் பல ஆயிரக்கணக்கானவர்களை இரட்சிப்புக்குள் வழி நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர். Exorter ஆக ஊழியத்தை ஆரம்பித்த இவர் போதகராகவும் (Teacher) தொடர்ந்து சென்னையில் "வாளவில் தேவாலயம் என்ற சபையை நிறுவி மேய்ப்பராகவும் (Paster) செயல்பட்டு வந்தார். விசுவாசம், தெய்வீக சுகம், பொருளாதார ஆசீர்வாதம், வெற்றி வாழ்க்கை முதலிய தலைப்புகளில் இடிமுழக்க கருத்தரங்குகள் மூலம் போதனைகளை அளித்து வந்த இவர் Rainbow Bible Training Centre ஆரம்பித்து மாணவர்களை ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்தி வந்தார். இது தற்போது வேதாகம ஆராய்ச்சி மையமாக (he Bible Research Centre) செயல்படுகிறது. தேவன் தமக்கு அளித்த செய்திகளை சகோ. SIP இடிமுழக்கம் என்ற பத்திரிகையின் மூலமாகவும், ஒளி, ஒலி நாடாக்கள் மூலமாகவும் மக்களுக்கு அளித்து வந்தார். சிறந்த பாடகரும், பாடல் ஆசிரியரும், இசை அமைப்பாளருமான இவருடைய பாடல்கள் ஒளி, ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகமெங்கிலும் மக்களிடத்தில் வளமான வரவேற்பை பெற்றுள்ளன. சகோதரனுடைய பத்திரிகைகள், புத்தகங்கள். ஒளி, ஒலி நடாக்கள் பெற விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். வானவில் தேவாலயம் என்ற அறக்கட்டளையின் ஊழியங்களான வேதாகம ஆராய்ச்சி மையம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலைப்பேசி ஊழியங்கள், ஒளி ஒலி நாடாக்கள், முகாம்கள், படைமுயற்சி கூட்டங்கள், கருத்தரங்குகள், இடிமுழக்கக் கூட்டங்கள் ஆகியவைகள் நடைப்பெற்று வருகின்றன. தொடர்ந்து இவ்வழியங்கள் நடைபெற தேவன் எல்லா அனுகூலமான காரியங்களை வாய்க்கச் செய்ய ஜெபித்துக்கொள்ளுங்கள். 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் 145 பேர் பங்கு பெற ஆரம்பமான வானவில் தேவாலயம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் சபை அமைக்கப்பட வேண்டும் என்பது போதகரின் தரிசனமாகும். இந்த தரிசனத்தோடு ஊழியங்களை ஸ்தாபிக்க விரும்புகிறவர்கள் தொடர்புக்கொள்ளவும், வானவில் தோன்றும் இடங்களில் எல்லாம் வானவில் தேவாலயங்கள் தோன்றும் (ஏசேக்கியல் 1260 ஊழியம் மாறலாம், ஊழியக்காரர்கள் மாறலாம். தேவனுடைய வார்த்தைகளோ ஒருக்காலும் மாறாது. .... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான் (. 11:4) சென்னைக்கே மிக அழகு சேர்ப்பது மெரினா கடற்கரை, அந்த கடற்கரைக்கும் அழகு கொடுத்தது சீரணி அரங்கம், அந்த அரங்கத்திற்கும் அழகு கூட்டியது தேவனுடைய சத்திய வார்த்தைகள். 1991ஆம் ஆண்டு Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன். தேவனுடைய சத்திய வார்த்தைகள் பேசப்பட்டன. இந்த சீரணி அரங்கத்தில் நடைபெற்ற 5 நாள் கூட்டத்திலும் 5 மிக முக்கியமான செய்திகள் பேசப்பட்டன. புதைப்பொருள் ஆராய்ச்சியினால், விஞ்ஞானத்தினால். சரித்திரத்தினால், தீர்க்கதரிசனத்தினால், தற்கால செய்திகளினால் கிறிஸ்தவம் நிரூபிக்கப்படுகிறது என்று முழங்கினார். இச்செய்திகளினால் தமிழகமே அசைக்கப்பட்டன. சென்னை சபைகள் எல்லாம் புதிய உணர்வுகளுக்குள்ளாக மாற்றப்பட்டன. இணையதள வசதிகள் அவ்வளவாக இல்லாத காலத்தில், ஏராளமான கிறிஸ்தவத்தின் ஆதாரச் சான்றுகளை அள்ளி வழங்கினார். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாமல், புறமதஸ்தர்களும், பண்டிதர்களும், அறிவில் சிறந்தவர்களும், சிந்திக்க திறன் வாய்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கிறிஸ்தவத்தின் ஆதாரச் சான்றுகளாக அவைகள் இருந்தன. விஞ்ஞான, தீர்க்கதரிசன செய்திகளை விஜய் TVயில் ஒளிப்பரப்பினபோது அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. எனவே இந்த செய்திகளை தொகுத்து VCDயில் வெளியிட்டோம். அதில் திருப்தியடையாத விசுவாசிகள் முழுசெய்தியும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால் புதுபொலிவுடன் DVDயில் வெளியிடுகிறோம். பொய்யான சிடிக்களை வாங்காமல், விற்காமல் இருக்கும் அனைத்து கிறிஸ்தவ புத்தக கடைகளும், விசுவாசிகளும், எங்களிடம் காட்டும் அன்பான ஆதரவுக்கு வானவில் தேவாலயம் நன்றி செலுத்துகிறது. எங்கள் நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் ஒளிபரப்பும் Angel TVக்கும். Salvation TVக்கும் வானவில் தேவாலயத்தின் சார்பாக நன்றி செலுத்துகிறோம். தேவனுக்கே துதி கனம் மகிமை உண்டாவதாக. மார நாதா! இயேசு வருகிறார். ... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான் (எபிரெயர் 124)