மன்னுயிர்த் தொகுதி
mannuyirth thogudhi
1.மன்னுயிர்த் தொகுதியீ டேற வானினும் இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை பன்னியேத் தெடுப்பது, பாவ ஜீவருக்கு இன்னமு தாயதி யேசு நாமமே.
2.தெருளெலாந் தனதெனுந், தெய்வ மாமறைப் பொருளெலாந் தனதெனப், பொலிந்தி லங்குவது அருளெலாம், அன்பெலாம் அறனெலாம், வளர்த்து இருளெலாந் தொலைப்பதி யேசு நாமமே.
3.நித்திய ஜீவனும் நெறியும் போதமும் சத்திய நிலையமும் தானென்றுள்ளது; பத்தியில் பரவுவோர் பரம வீடுற இத்தலத் திறுத்ததி யேசு நாமமே.
4.நன்னெறி புகுத்திடும்,நவையி னீக்கிடும், இன்னலை யகற்றிடும், இகல் செகுத்திடும், உன்னதத் துய்த்திடும், ஒழுங்கு காத்திடும், எந்நலத்தையுந் தரும் யேசு நாமமே
5.அன்பினுக் குருவநல் லறத்துக் காலயம், மன்பதைக் கருண்மழைவழங்கு பைம்புயல், நின்பர மென்றினை வோர்க்கு நித்தியபேர் இன்பசஞ் சீவிதம் யேசு நாமமே.
6.தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும் கருமமும் ஈதலால், கருதில் யாதுமோர் அருமையும் பயனுமொன்றில்லை யாதலால், இருமையுந் துணையெனக் கியேசு நாமமே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal