யூதாவின் கோத்திரத்தில்
yoodhaavin kothirathil
யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார் பெத்லகேமில் பிறந்துவிட்டார்
யூதாவின் கூட்டமே ஆர்ப்பரித்து பாடிடு-2
மரண இருளின் தேசம் வெளிச்சம் பிரகாசிக்குதே உள்ளத்தின் இருள் நீக்கினார் களிப்பாக மகிழச் செய்தார்
நம் இயேசு ராஜா தான் யூதாவின் சிங்கமே எதிர்ப்பவன் எவருமில்லை எதிர்த்த சாத்தானின் தலையும் இல்லை
சிறியோரும் பெரியோரும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர் இரட்சகர் வந்து விட்டார் புது வாழ்வை தந்து விட்டார்