யேசுவுடன் சுகமாகவே செல்வேன்
yesuvudan sugamaagavae selven
1. யேசுவுடன் சுகமாகவே செல்வேன் எங்கேயும் அவர் என்னை நடத்தட்டும் யேசு இல்லா ஸ்தலம் ஏதுவாயினும் எச்சந்தோஷமும் பறந்தே போய்விடும்.
எங்கேயும் எங்கேயும் பயம் அறியேன் யேசுவுடன் சுகமாகவே செல்வேன்.
2. யேசுவுடன் எங்கேயும் தனித்தல்ல என் நண்பர்கள் என்னை விட்டுப்போனாலும் ஏது காட்டில் என்னைக்கொண்டு போனாலும் யேசுவுடன் எல்லா சந்தோஷமுண்டே.
3. யேசுவுடன் எவ்விடமும் தூங்கலாம் சாவின் நிழல் என்னை மூடுகையிலும் ஏக்கம் நீங்கி எழும்புவேன் நிச்சயம் யேசுவுடன் இன்ப வீட்டில் வாழுவேன்.