இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
yesuvin nindhaiyais sumappom
இயேசுவின் நிந்தையைச் சுமப்போம் வாசலுக்கு புறம்பே போவோம்
சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களையும் துன்புறுத்தும் தியர் கேள்விகளையும் அன்பருடனே இன்பமாய் ஏற்போ புறப்பட்டுப் போகக் கடவோம்
ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து சீஷர்கள் அடைத்த சிறைகளை சிந்தித்து மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
கள்ள சகோதரர் கைவிடுவார்கள் சொல்லாதவைகளைச் சுமத்திடுவார்கள் நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும் வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும் நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
அக்கினிக்கு நம்மை இரையாக்கினாலும் விக்கினங்கள் வெகுவாய்ச் சூழ்ந்தாலும் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியைப் பார்த்தே