இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
yesuvin maarbil naan saayndhumae
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவப்பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் - அல்லேலூயா
சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என் மனபாரம் எல்லாம் மாறிடும் - தம் கிருபை என்றும் என்னைத் தாங்கிடும்
சிநேகிதர் எல்லாம் கைவிட்டிடினும் நேசராய் இயேசென்னோடிருப்பதால் மண்ணில் என் வாழ்வை நான்விட்டேகியே மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே இயேசுவோடு சேர்ந்து நித்யம் வாழுவேன