இயேசுவைப் போல எனக்கொரு
yesuvaip pola enakkoru
இயேசுவைப் போல எனக்கொரு நேசர் உலகினில் வேறில்லை நேசரின் நேசம்போல் தெவிட்டாத இன்பம் இகமதில் வேறில்லை
மாறாத அன்பு நித்திய நேசம் மானிடர்க்கீந்தாரே மறதியின் பூமியில் மறந்திடுவேனோ மகிமையின் நேசத்தையே மகிழ்வேன் உம் அன்பினிலே
அலைந்திட்டேன் பலநாள் அமைதலும் இல்லையே அன்பினை அறியுமுன்னே மந்தையின் காலடி தொடர்ந்திட்ட பின்னே மகிமையே இறங்கிடுதே--தேவ மகிமையை காண்கின்றேனே
நேரில் எல்லாம் உன்னதர் நீரே நேசிப்பேன் உத்தமமாய் இடதுகை தலைகீழ் வலக்கரம் அணைக்கும் நேசமே இன்பமிதே நேசத்தால் சோகமானேன்
மலைகள் மேல் குதித்தும் குன்றின் மேல் துள்ளி வருகிறார் நேசர் இவர் மலர்ந்திட்ட அவர் முகம் காண்பிக்கின்றாரே கல்வாரி நாயகனே களிப்பேன் உம் அன்பினிலே
சந்திரனைப் போல அழகுடன் இலங்கி சூரியன் போல் ஒளியே கொடிகள் பறந்திடும் படையினைப் போல உதித்திடும் யார் இவளோ சபையாம் மணவாளியோ
எப்போ நீர் வருவீர் ஏங்குகின்றேனே இயேசுவே சீக்கிரமே ஏகமாய் இணைந்திடும் நாள்தனை எண்ணியே ஏகுவேன் இகமதிலே துதித்திடுவேன் தினமே