இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
yesuvai nambi visuvaasippavan
இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் அவர் செய்த கிரியை தானும் செய்வான் அதிலும் மேலாய் செய்திடுவான் என்று நம் இயேசு கூறினாரே
2. நமது மாதிரி இயேசு தாமே அவரின் சுவட்டை பின்பற்றுவோம் நாதனின் நல்சிந்தை நிறைந்தோராய் நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம் – மாற்றி
3. கிருபை ரட்சண்யம் சத்தியமும் விசுவாசம் ஆவியின் வல்லமையும் வல்ல நல் ஆவியின் கனிகளும் அவர் போல வாழச் செய்திடுமே – மாற்றி
4. இயேசுவே மெய்யான திராட்சை செடி அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய் கனி கொடுக்கும் கொடி எதுவோ அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார் – மாற்றி
5. தேவ எக்காளம் முழங்கிடவே ஆரவாரத்தோடே தோன்றிடுவார் ஆயிரம் ஆயிரம் சுத்தருடன் மறு ரூபமாகி ஏகிடுவோம் – மாற்றி