இயேசுவே இயேசுவே
yesuvae yesuvae
இயேசுவே இயேசுவே என் தேவன் நீரல்லோ என் மேய்ப்பர் நீரல்லோ இயேசுவே இயேசுவே என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே
யோபின் சோதனை வந்தாலும் அக்கினி நம்மை சூழ்ந்தாலும் தேவன் என்னை கைவிட மாட்டார் என் கால்கள் தளர்ந்து போனாலும் என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும் என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார்
கோலியாத்கள் வந்தாலும் சிங்க குகையில் இருந்தாலும் - நான் சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன் கொடுத்த கர்த்தர் எடுத்தார் எல்லாம் எனது நன்மைக்கே என் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே
கெத்செமனேயின் நடுவிலும் பிலாத்துவின் வாரிலும் - என் தேவன் என்னைக் கைவிடமாட்டார் பேதுரு விட்டு விலகினாலும் சிலுவையில் என்னை அறைந்தாலும் அழைத்த தேவன் உண்மையுள்ளவர்