இயேசுவே உம்மை நம்பி
yesuvae ummai nambi
தானாக வந்து நான் வேண்டும் என்று கைபிடித்து அழைத்தவரே என் தாயின் கருவில் நான் உருவாகுமுன்னமே முன்குறித்து வைத்தவரே என் வாஞ்சைகள் எனக்குள் உருவாகுமுன்னமே நிறைவேற்ற துடிப்பவரே என் சத்துரு கை என்னில் ஓங்கி வருமுன்னமே முன்வந்து நிற்பவரே
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன் இயேசுவே உம்மை நம்பி மதிலை தாண்டுவேன் இயேசுவே உம்மை நம்பி வெற்றியைப் பெறுவேன் உம்மை நம்பியே
1.ஆமானின் தந்திரங்கள் மொர்தேகாய்க்கு ஆசீர்வாதமாக மாறியதே முன்னின்று நடத்துபவர் கர்த்தர் தாமே கொஞ்சமும் யோசிக்காமல் முன்னேறி செல் இயேசுவே உம்மை நம்பி
2.யோர்தான் பின்னிட்டு திரும்பியதே செங்கடல் இரண்டாக பிளந்ததே இஸ்ரவேல் ஜனங்களுக்கு இறங்கினவர் இன்றைக்கும் எங்கள் மேலே இறங்கிடுவார்