இயேசுவே நீரே எந்தன்
yesuvae neerae endhan
1. இயேசுவே நீரே எந்தன் புகலிடமே புவி மீது எங்கும் ராஜன் நீரல்லவோ அதிசய செயல்கள் நித்தம் நினைந்து அகமகிழ்ந்து அம்மை என்றும் உயர்த்திடுவேன்
அருள் தாரும் என் தேவனே இருள் சூழும் இவ்வுலகில் அனுதினம் நான் உம்மைத் துதிப்பேன் ஸ்தோத்திர பலிகள் செலுத்திடுவேன்
2. கொடும் ரோகமோ பெலவீனங்களை மரண நிழல் என சூழ்ந்திடும் மாற்றினீர் மாறாநீர் மதுரமாக இயேசுவே நீரே எந்தன் வைத்தியரே - அருள்
3. இளம்பயிர் மழை போல உபதேசத்தால் பிதாவே என்றழைத்திட அபிஷேகத்தால் பயம் யாவும் அகற்றியே திடனளித்தீர் ஞானம் நீதி பரிசுத்தம் மீட்பும் நீரே - அருள்
4. இந்தப் புவியில் யான் பரதேசியன்றோ நிலையான நகரம் எனக்கில்லையே நேர்த்தியான இடங்களில் பங்கடைந்தேன் இயேசுவே நீரே எந்தன் சுதந்திரமே - அருள்
5. கண்ணீரோடே விதைப்பவர் நிறை பலனை கெம்பீரத்தோடறுக்கும் வேளை வருதே நேசரே உம் வருகையின் தினமதில் யான் ஆசையாய் உம்முகம் கண்டானந்திப்பேன் - அருள்