இயேசுவே நீர் மேலானவர்
yesuvae neer melaanavar
இயேசுவே நீர் மேலானவர் (3) துதிக்குப் பாத்திரர் பாத்திரரே நான் காண்கின்ற எல்லாமே உமக்காகவே நான் காணாத எல்லாமே உமக்காக உண்டானதே
1. ஆதியும் நீரே யாவிலும் முந்தியவர் மரித்து உயிர்த்து முதற்பேரானவர் சகல பூரணமும் உமக்குள் உள்ளதே பரலோக பூலோக படைப்பின் கர்த்தரே
மேலானவர் மேலானவர் மேலானவர் துதிக்குப் பாத்திரர் பாத்திரரே
2. எமக்கு எதிராய் இருந்த கையெழுத்தை குலைத்து ஆணியால் சிலுவையில் அடித்தீர் சாத்தானின் அதிகாரத்தை உரிந்து கொண்டு கோர சிலுவையில் வெற்றி சிறந்தீர்
3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தா வல்லமை தேவா நித்திய அப்பா நீதியின் சூரியனே நித்திய கன்மலையே தாகத்தை தீர்க்கும் ஜீவ தண்ணீரே