இயேசுவே இரட்சகரே நேசரே
yesuvae iratsagarae nesarae
இயேசுவே இரட்சகரே நேசரே என் பிதாவே வாரும் இவ்வேளையிலே வந்தெம்மை ஆசீர்வதித்தருளும் என் இயேசுவே
கல்வாரி மேட்டினில் கோர சிலுவை மீதில் தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக என்ன தான் பதில் செய்குவேன்
உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே உயிர்ப்பியும் இந்நாளிலே உம் ஆவியால் தேற்றியே ஆற்றிடுமே
வாடிய பயிருக்கு வான் மழை தருபவரே - நாடியே தேடுகிறேன் உம் பாதத்தில் நன்மையால் நிரப்பிடுமே