இயேசுவே என்னுடன் நீ பேசு
yesuvae ennudan nee pesu
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு நாள் முழுதும் என்னை வழிநடத்து .
உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம் உன் திரு இதயம் பேரானந்தம் ( 2 ) உன் திருவாழ்வெமக்கருளும் இறைவா இறைவா உன் திருவாழ்வெமக்கருளும் உன் திருநிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பா
இயேசுவின் பெயருக்கு மூவுலகென்றும் இணையடி பணிந்து தலைவணங்கிடுமே இயேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க இயேசுவே உம் புகழ் வாழ்க இயேசுவே நீர் என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே