இயேசு தான் பதிலும் காரணமும்
yesu thaan padhilum kaaranamum
இயேசு தான் பதிலும் காரணமும் என்னை நேசித்துக் காத்திடும் கர்த்தரவர்
1. வழித் தப்பிப் போன பாவி என்னை கரம் கொண்டழைத்த கர்த்தரவர் சிலுவையிலே தான் மரிக்க தம்மை எனக்கு தந்தனரே – 2
2. கவலையாய் கண்ணீர் சிந்தும் போது கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ கல்வாரியின் அன்பை எண்ணி களிப்புடனே நான் பாடிடுவேன் – 2
3. தூரமாய் போனத் துரோகி என்னை தூக்கி எடுத்தார் தூய தேவன் துதித்திடுவேன் பணிந்திடுவேன் தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை – 2
4. வந்திடும் எந்த பாவியையும் வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில் வந்திடும் இந்நேரமே வா என்றழைக்கும் மீட்பரண்டை – 2