இயேசு ராஜனே
yesu raajanae
இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன்
1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் அன்பான தேவனே என்னை உயர்த்தினீர்
2.கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே
3.அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே