இயேசு ராஜன் வருவார்
yesu raajan varuvaar
1. இயேசு ராஜன் வருவார் தூதரோடு வருவார் பக்தரை வானத்தில் சேர்ந்திடவே - நான் ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன் - பின்னும் ஜெயகெம்பீரம் கொண்டுளம் பொங்கிடும்
2. மணவாளனோடு மணவாட்டியாம் சபை மங்களமாய்க் கவி சாற்றிடுமே அப்போ மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் - அவர் நேசத்தின் ஆழம் ருசித்திடுவோம்
3. முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளையங்கித் தரித்து கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவான் அதில் சேர்ந்திடுவேன் நான் பாடிடுவேன் - அன்று பொற்கிரீடம் தரித்தாடிடுவேன்
4. காதலித்தேன் நான் காசினியில் இன்பம் விட்டு கர்த்தரோடென்று முறவாடிட-அங்கு கனக மணவறை ஜொலித்திடும் - அப்போ கர்த்தராம் இயேசுவை சுகிப்போமே
5. வானத்தில் எக்காளம் தொனித்திடும் சமயத்தில் சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார் - அப்போ அத்தனின் கல்யாண விருந்திலே நாமும் நித்தம் அவரோடார்ப்பரிப்போம்