இயேசு எந்தனோடிருப்பதால்
yesu endhanodiruppadhaal
இயேசு எந்தனோடிருப்பதால் எதுவும் என்னை அசைப்பதில்லை வாக்குத்தத்தம் செய்திருப்பதால் வாழ்க்கையிலே பயமுமில்லை
இயேசுவே இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
தாயின் கருவில் தோன்றும் முன்னே தயவாலே முன் குறித்தீர் உள்ளங்கையில் வரைந்திட்டீரே உம் பிள்ளையாக மாற்றினீரே
துக்கத்தால் நான் கலங்கும்போது தோல்விகளின் மத்தியிலே தோழனாக தோல் கொடுத்தீர் தாயைப் போல் தேற்றினீரே
சத்துருக்கள் முன்பாக பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர் என் தலையை உயர்த்தினீரே தலைக்குனிவு எனக்கில்லையே