யாரிவர் கொல்கொதா
yaarivar kolgodhaa
1. யாரிவர் கொல்கொதா மேட்டினிலே கோர சிலுவையின் மீதினிலே யாருமற்றவராய் ஏற்றும் வேதனை அறையுண்டாரே இரட்சகரே
மன்னவனே பொன்முடி மன்னவனே முள்முடி தான் உந்தன் பங்கானதோ மூன்றாண்டுகள் மீதில் தொங்கினாரே
2. நன்மையே செய்திட்ட நாற்கரங்கள் தன்மையை தாங்க அறையுண்ட தோ தேவனின் வன் கரம் இகம் வந்தோரே வேதனை கைகள் ஏற்றதுவோ - முன்
3. வேதனை சோதனை சாதனை மேதினி மீதினில் சுமந்தோராய் கே தமில்லாததோர் தேவகுமாரன் பாதகன் போல மாண்டனரே - முன்
4. மா வல்ல தேவன் ஏகசுதன் நாவினால் சொல்லும் நற் பலியாய் பாவனராக்கிட நம்மையும் தம்மைப்போல் பாரக்குருசில் தொங்குகிறார் - முன்
5. கன்மலைகள் பிளந்திடுதே கல்லறைகளும் திறந்திடுதே கல்மனமே குலுங்காயோ நீ இன்னும் கண் துஞ்சி இயேசு ஜீவன் விட்டார் - முன்