யார் என்னை மறந்தாலும்
yaar ennai marandhaalum
யார் என்னை மறந்தாலும் இயேசென்னை மறப்பதில்லை உலகமே வெறுத்தாலும் இயேசென்னை வெறுப்பதில்லை
உம் சிறகுக்குள் தஞ்சம் கொண்டேன் உம் மறைவுக்குள் மறைந்து கொள்வேன் உம்மப்போல ஒரு தெய்வத்தப் பார்க்கல்ல எனக்காய் உயிரையும் தந்திட
1. நூலறுந்தப் பட்டம் எங்கெங்கோப் பறக்கும் நான் போகும் பாதையும் புரியல -2 இயேசுவே நீர் மாத்ரம் உம் முகம் மறைத்திருந்தால் -2 மண்ணோடு மண்ணாய் போயி மக்கி தான் போயிருப்பேன்-2
2. சிறகொடிந்தப் பறவை வானிலேப் பறக்குமோ எப்போது நானும் பறப்பேனோ -2 அப்பா உம் பெலனைத் தந்து கழுகுபோல் எழும்பவைத்தீர் -2 வானத்தில் சிறகுகள் அடித்து உயர நான் எழும்பிடுவேன் வானத்தில் சிறகுகள் விரித்து உயர உயர பறந்திடுவேன்