யார் என்ன சொன்னாலென்ன
yaar enna sonnaalenna
யார் என்ன சொன்னாலென்ன என் நேசர் என்னோடுண்டு யார் என்ன வெறுத்தாலென்ன என் மீட்பர் என்னோடுண்டு
உயிரோடு கலந்தவரை உணர்வோடு துதித்திடுவேன்
1. ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் மாறிடார் ஒரு நாளும் என்னை விட்டு விலகி போகாதவர் - 2
2. எனக்குள்ள இருக்கிற என் தேவன் பெரியவர் - 2 எனக்காகவே யாவையும் செய்து முடித்திடுவார் - 2
3. என் இயேசு சீக்கிரம் மேகத்தில் வருவாரே என் கண்ணீர் யாவையும் இயேசு துடைத்திடுவார்