விழித்திருந்து வேதம் கேட்டு
vizhithirundhu vedham kettu
விழித்திருந்து வேதம் கேட்டு மகிழ்ந்திடுவோம் நாமே விழிப்புடனிருப்போர் விமலனைக் காண்பார் விண் நகரேகிடுவார் விழி
1. நள்ளிரவினிலே நம் நாதன் வருவார். நாமெதிர் கொண்டு செல்வோம் உள்ளமே உருகக் கண்கள் நீர் பெருக ஊக்கமாய் உழைத்திடுவோம்
2. தூக்கத்தாலே ஐத்திகு விழுந்து துறந்தான் தனதுயிரை ஆக்கையை ஒடுக்கி ஆவியைப் பெருக்கி அனலுடன் ஸ்தோத்திரிப்போம்
3. காத்திருப்போர்க்கு ஆத்திரம் அளிப்பார் புதுப் பெலன் ஆவியுமே காத்திருப்போமே கண்விழிப்போமே கருத்தாய் ஜெபிப்போமே
4. ஒருமனமுடன் விழிப்புடன் ஜெபித்தால் இரட்சகர் வந்திடுவார் ஜாக்கிரதையுடனே வாக்கியம் படிப்போம் வசனங்கள் உரை கேட்போம்