விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்
visuvaasam unakkulle irundhaal
விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும்
மாறும் மாறும் இனியெல்லாமாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும் மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கையெல்லாம் இன்று மதுரமாகும்
தோல்விமேல் தோல்வியால் துவண்டிட்டாயோ-நீ திடன் கொண்டு எழம்பாமல் முடங்கிட்டாயோ மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ உன் சுயம்நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ
பாவங்கள் உன்னைசுற்றி வளைத்திட்டதோ சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ உன் துக்கம் தான் உள்ளத்தை உடைத்திட்டதோ அவிசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ
வாழ்க்கைப்போராட்டங்கள் உன்னை கொல்லுதோ உடல்பெலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ முழுபெலத்தாலே உழைத்தும் ஒன்றுமில்லையோ நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ