விலையேறப் பெற்ற ரத்தமே
vilaiyerap petra rathamae
1. விலையேறப் பெற்ற ரத்தமே சிலுவையில் கண்டேன் அதினால் என் மன்னிப்பாயிற்றே என்றெண்ணி நம்பினேன்.
ரத்தம்! திவ்விய ரத்தமே! யேசு சிந்தினாரே! சிலுவையில் பாடுபட்டோராய் மாண்டாரே எனக்காய்.
2. லட்சாதி லட்சம் நன்மையே தேவன்பினா லுண்டாம். எல்லாவற்றிலும் சிறந்ததே என் யேசு ரத்தமாம்.
3. திரளான பாவம் செய்த நான் பிசாசின் அடிமை. திரு ரத்தத்தால் என் யேசுதான் மீட்டுக்கொண்டார் என்னை.
4. பெருவெள்ளம் போன்ற ரத்தமே என் பாவம் நீக்கிற்று. கருத்தாய்க் கண்டேனே நித்தமே துதி உண்டாயிற்று.
5. சீயோன் உச்சியில் இப்பாட்டையே என்றைக்கும் பாடுவோம் சந்நிதானத்தில் கெம்பீரமாய் ரத்தத்தைப் போற்றுவொம்.