விலகா உம் அன்பிலே
vilagaa um anbilae
விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை - உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர்
என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று நான் பார்க்க உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தவரே
1.வானை எல்லாம் - உம் ஒரு கையில் நீர் அடக்கி ஆழ பூமி உந்தன் பாதபடி காற்றும் உந்தன் சொல்க்கேட்டு விலகிப்போக தூதர் உம்மை பாடி மகிழ கோடி ஜனங்கள் கூடி வாழ என் மேல் உம் கண் வைத்தீரே
2.கண்ணீர் மழையாய் நிறைந்த எந்தன் சோக வாழ்வில் வானவில்லாய் - என் வாழ்வில் வண்ணம் சேர்க்க எனக்காய் நீர் மறிக்க யோசிக்கவில்லையே என்னிலும் வேறெதுவும் உமக்கு பெரிதில்லயே