வழியான தெய்வமே
vazhiyaana theyvamae
வழியான தெய்வமே வாழ்வளிக்கும் நாதனே வல்லப்பெரும் குயவனே வானவரின் குமரனே
வனைந்தீரே வனைந்தீரே வாழ்வளிக்க துணை நீரே துணை நீரே நான் ஜொலிக்க
1. சத்திய வேந்தனே நீதியின் ராஜனே சமத்துவ நாயகனே சஞ்சலம் தீர்ப்பவரே விழைந்தீரே விழைந்தீரே விருப்பமாக சுமந்தீரே சுமந்தீரே சுகமாக
மேய்ச்சலின் பாதையில் சத்தியத்தை மேய்ந்திட நீதியின் கோலினால் எம்மை நடத்தும் மேய்ப்பீரே மேய்ப்பீரே பசியாற காத்தீரே காத்தீரே கருத்தாக
2. சத்திய வழியிலே நித்தியம் அடைந்திட திரித்துவ தேவனே துணைப்புரியும் அழைத்தீரே அழைத்தீரே அன்பாக நினைத்தீரே நினைத்தீரே முன்பாக
3. தூதர்கள் சேனையோடு வருவீரே துயரற்றரோருக்கு வாழ்வளிக்க வருவீரே வருவீரே அழைத்து செல்ல தருவீரே தருவீரே நித்திய வாழ்வை