வருவீர் எப்போது மணாளா
varuveer eppodhu manaalaa
வருவீர் எப்போது மணாளா வரும் நேரம் ஆகவில்லையா
வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே பாழ் உறும் லோகில் நீர் என் துணையே நிற்ப
அன்பால் அணைத்த அருள்கரமே பண்பால் உயர்ந்த பராபரமே ஆட இன்சொல் அளிக்கும் உம் முகமே துன்பம் காணாதினி என் அகமே
எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை புண்ணியன் போய்கட்டும் நித்திய வீட்டை என் இதயம் சோகம் கொண்டதாலே விண்ணின்நாதா வேகம் வந்திடுமே
உம் வரவால் உள்ளம் வாடிடுதே உம்மைக்கான கண்கள் நாடிடுதே என்று என் வாஞ்சை நிறைவேறுமோ அன்று என் உள்ளமதை தாங்குமே
வாரும் வாரும் நீர் விரைவாகவே தீரும் என் குறைகள் நிறைவாகவே சுத்திகரித்து சொல்லற்கரிய மத்திய வானில் மணம் புரிய