வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
varuthappattu paaram sumappavarae
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே வருவீர் இயேசுவண்டை இளைப்பாற
தாகமுள்ளோரே வாருமென்றார் தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் தண்ணீர் கேட்டார் அவள் தாகம் தீர்த்தார் பாவ மன்னிப்பைக் கொடுத்து மகிழ செய்தார்
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள் கடும்நோய் நீங்கப் பலரிடம் சென்றாள் நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள் நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள்
நாலு நாளாயிற்று நாறும் என்றாள் நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார்-கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் மரித்தவன் உயிர்த்தே எழச் செய்தார்
நாடு நகரங்கள் சுற்றி நடந்தார் நானே வழி வேறில்லை என மொழிந்தார் களைப்படைந்தார் அத்தி மரத்தை கண்டார் கனியற்றிருப்பதைக் கண்டு சபித்தார்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Bb
F C A7 Dm
Dm F
Gm C Dm
Dm Bb
F C Am Dm
Dm F
Gm C Dm
Dm
Bb
F C Am Dm
Dm F
Gm
C Dm
Bb
F C Am Dm
Dm F
Gm C Dm
Dm Bb
F C Am Dm