வல்ல தேவன் என்னோடிருப்பாரே
valla devan ennodiruppaarae
வல்ல தேவன் என்னோடிருப்பாரே வழுவாதென்னை காத்திடுவாறே அல்லேலூயா என்றார்ப்பரிப்பேன்
பயப்படாதே என்று உரைத்தாரே பாரில் என்னை மீட்டெடுத்தாரே பேரைச் சொல்லி அழைத்திட்டாரே பேரானந்தம் நான் சொந்தமானேன்
தண்ணீர்களை கடந்திடும் போது தயங்காதே உன்னோடு இருப்பேன் அக்கினியில் நடக்கும் போது அதுன் பேரில் பற்றாதே என்றார்
இமைப்பொழுது என்னை கைவிடாமலும் இரக்கங்களால் சேர்த்துக் கொள்வாரே நித்ய கிருபையுடன் இரங்கி நித்தம் என்னை நடத்துவாரே
உறுதியாய் உம்மைப்பற்றிக் கொள்வாரே உண்மையாய் என்னைக்காத்துக் கொள்வீரே கெஞ்சும் வேண்டுதல்கள் கேட்பீரே தஞ்சம் வேறொருவருமில்லை
அறிவாரே நான் போகும் வழியை அறிந்தென்னை சோதித்திடுவாரே புடமிட்டு சுத்தம் செய்வாரே பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன்
வருவேன் என்ற வாக்குப்படியே வருவீரே என் யேசு மணாளா அசைவில்லா அந்நாட்டைச் சேர ஆவலாக காத்திருப்பேன்