வாழுவேன் அன்பர் நாடதில்
vaazhuven anbar naadadhil
வாழுவேன் அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன் வாஞ்சையுடன் காக்க எந்தன் ஆவல் தீர்த்திட்டார் வாழுவேன் இன்ப நாடதில்
என்ன இம் மேன்மை என்பேர்க்காய்த் தானோ என்னென்ன இன்பம் ஏன் சொந்தமானதோ ஏற்றுவேன் என் உள்ளமதில் - துதி என்றும் என்னை மீட்ட அன்புக் கூறுவேன் நிதம்
அன்பின் மகிமை அன்பே நான் காண அன்பே உம் சாயல் என்னில் தரித்தீரே ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் - துதி அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே எனில்
கைவேலையில்லா கனமான வீடே கைவசமாக்க அருள் என்னிலீந்தீரே காதலா நின் நன்றி கூறுவேன் - தினம் காலா காலங்களாய்ப் பாடிடுவேன் நான் - துதி
நின் கிருபை தேவா என்றென்றுமாக இவ்வேளை காண இதயந்திறந்தீரே இன்பமாக போற்றிடுவேன் நான் - இனி இன்னொரு அண்ணலெனக்கெங்குமில்லையே வேறு -4
உன் ரூபம் தானே என் பிரியம் தேவே உம்மோடு சேர என் நெஞ்சு பொங்குதே உன்னதா உம் மேன்மை எத்தனை - மகா ஊற்றுவேன் நிதம் உள்ளமதை நான் - நிதம்