வாரும் யேசு நாதா வாரும்
vaarum yesu naadhaa vaarum
1. வாரும் யேசு நாதா வாரும் பக்தர் காத்து நிற்கிறார் காடு போன்ற லோகில் பாரும் கஷ்ட யாத்திரை செய்கிறார் உம்மைக்காண உம்மைக்காண ஆவல் கொண்டு செல்கின்றார்.
2. சர்வ சிஷ்டி ஏகமாக காத்துத் தவிக்கின்றதே மீட்பு தோன்ற ஆவலாக எதிர் நோக்குகின்றதே நீர் வந்தாலோ நீர் வந்தாலோ பூமி செழித்தோங்குமே.
3. வாரும் யேசு நாதா வாரும் வானம் பூமி ஆளுவீர் உம்மை நம்பினோ ரெல்லாரும் வாழ்வு காணச் செய்குவீர் பேரானந்தம் பேரானந்தம் தந்து பூரிப்பாக்குவீர்.