வானின் கீழ் வாழும் மாந்தரே
vaanin keezh vaazhum maandharae
1. வானின் கீழ் வாழும் மாந்தரே கர்த்தாவின் புகழ் ஓங்கிட சர்வ வல்லவர் நாமத்தை எல்லாரும் போற்றிப் பாடுவோம்.
2. கர்த்தா உம் க்ருபை என்றென்றும் உம் சத்ய வார்த்தைகள் சதா உதயமான உம் கீர்த்தி கரை மட்டிலும் நிலவும்.
3. நிலையற்ற ஓ மாந்தரே! பாடல்களினால் போற்றுவோம் அவர் ரட்சிப்பின் செய்தியை உரைத்திடுவோம் சத்தமாய்.
4. தேசமெங்கும் நாம் பாடுவோம் வலுவாய் தொனித்திடுவோம் கெம்பீர சத்தத்தினாலே லோகில் அவரை வாழ்த்துவோம்.