வாக்கு பண்ணினவர்
vaakku panninavar
வாக்கு பண்ணினவர் வாக்கு மாறாதவர் எப்போதும் நம்மோடு இருக்கின்றார் வாக்கு பண்ணினவர் வாக்கு மாறாதவர் இன்றும் நமக்குள்ளே இருக்கின்றார்
இனி கவலை நமக்கில்லையே எந்த கலக்கமும் இனியில்லையே
1. மந்திரம் நமக்கு இல்லை குறி சொல்லல் எதுவும் இல்லை சாத்தானை நசுக்கிடுவோம் நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம்
2. காற்றையும் காண மாட்டோம் பெரும் புயலையும் பார்க்க மாட்டோம் மழை கொட்டப்படும் வாய்க்கால்கள் நிரப்பப்படும்
3. ஒருவழியாய் வருபவனை – அவர் ஏழு வழியாய் அனுப்பிடுவார் இனி எகிப்தியர் நமக்கு இல்லை எந்த பார்வோனும் நமக்கு இல்லை
4. கைகளின் பிரயாசத்தை – அவர் வாய்க்க செய்திடுவார் நூறு மடங்கு ஆசீர்வாதம் என்றும் நமக்கு உண்டு
5. மாம்சமான யாவர் மேலும் – அவர் ஆவியை ஊற்றுவேன் என்றார் இன்றும் உன் மேலும் ஊற்றிடுவார் என்றும் அக்கினியால் விடுவார்