வாதை உன் கூடாரத்தை
vaadhai un koodaarathai
வாதை உன் கூடாரத்தை அணுகாது ஒரு பொல்லாப்பும் உனக்கு என்றும் நேரிடாது
உன்னை காத்திட என் மகனே நான் உன்னோடே இருக்கின்றேன் என் செட்டையின் மறைவுக்குள் உன்னை ஒளித்து காத்திடுவேன்
1. கலங்காதே திகையாதே உன்னோடு நான் இருப்பேன் பயந்திட்டு போகாதே - என் தோள் மீது நான் சுமப்பேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு நான் வருவேன் எத்தீங்கும் அணுகாமல் அரணாக துணை நிற்பேன்
2. வாதையும் கொள்ளை நோயும் உன்னை ஒன்றும் அணுகாது வறட்சியும் பஞ்சங்களும் உன் தேசத்தில் நுழையாது உனக்கு எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே வீணான சாபங்கள் எல்லாம் உன் மீது பலிக்காதே ️
3. கண்ணீரின் பள்ளத்தாக்கில் ஆறுதலாய் நான் இருப்பேன் உன் துக்கம் எனதாக்கி உன்னிடம் வர செய்வேன் ️ வெட்கப்பட்ட தேசத்திலே உன் தலையை உயர்த்திடுவேன்