வாதை எந்தன் கூடாரத்தை
vaadhai endhan koodaarathai
வாதை எந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது பொல்லாப்பு எனக்கு நேரிடாது நேரிடாது அவர் மறைவினாலே அவர் நிழலினாலே அவர் சிறகாலே என்னை மூடுவதால்
1.பாழாக்கும் கொள்ளைநோய்க்கு தப்புவிப்பார் வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார் அவர் சத்தியமும் கேடகமும் அடைக்கலமாய் இருப்பதால்
2.வழியெல்லாம் என்னை காப்பாரே கையில் ஏந்தி கொண்டு போவாரே பாதையெல்லாம் தூதர் கொண்டு காக்கும்படி அனுப்பிடுவார்
3.நீடித்த நாட்களை தந்திடுவார் இரட்சிப்பை உனக்கு காண்பிப்பார் தப்புவிப்பார் கனம் தருவார் உயர்த்திடுவார் விடுவிப்பார்