உன்னை கட்டுவிப்பேன்
unnai kattuvippen
உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன்
அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன்
1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன்
2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர் எந்தன் தகப்பனல்லோ தோள்மீது சுமந்துடுவீர் நன் உந்தன் சேஷ்டபுத்திரன் உம் கரத்தின் கிரியை நான் நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
3.நீர் எந்தன் நம்பிக்கை நீரே என் ஒரே சொந்தம் என்ன ஓட்டம் முடிந்த பின்பும் என்னோடு வரும் செல்வம் தளராமல் காத்திருப்பேன் என் பரிசுத்தம் பார்த்துகொள்வேன் நீர் என்னை சேர்த்துகொள்வீரே உம்மோடு சேர்த்திடுவீரே