உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்
unnai adhisayam kaanappannuven
உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்-2 எண்ணிமுடியா அதிசயங்கள் உனக்கே செய்திடுவேன் ஆராய்ந்து முடியா பெரிய காரியங்கள் இன்றைக்கே தந்திடுவேன் அதிசயம் நடக்கும்-2 அவர் நாமம் அதிசயமே நிச்சயம் நடக்கும் -2 அதிசயம் அதிசயமே
1.மூடின கதவுகள் திறந்திடுவார் காலியான பாத்திரம் நிரப்பிடுவார் தூதர்கள் சேனை இறங்கிடுமே கர்த்தர் சொன்னது உனக்கு நடந்திடுமே
2. கற்பாறை நீருற்றாய் மாறிடுமே உன் பள்ளதாக்கை தண்ணீரால் நிரப்புவாரே அதிசயப்பட்டு நீயும் பூரிப்பாயே ஒத்தாசையும் சகாயமும் வந்துசேருமே
3.எட்டாத அறியாத காரியங்கள் உன் கண்காண உனக்கே தந்திடுவார் தூர்த்து போட்ட உன் துரவுகளும் ரெகொபோத்தாய் தேவன் மாற்றிடுவார்