உண்மைக் காதலை காதலை
unmaik kaadhalai kaadhalai
உண்மைக் காதலை காதலை நான் கண்டேன் சிலுவையின் நிழலினில் தஞ்சம் நான் கொண்டேன் விடுகதை போலவே இருந்த என் வாழ்விலே விடுதலைக் காண்கிறேன் காண்கிறேன் காண்கின்றேன்(னே)
எங்கோ திரிந்தேனே எல்லாம் இழந்தேனே மடிவே முடிவென்று நினைத்திருந்தேன் அழுதேன் தவித்தேனே இருளில் இருந்தேனே வாழ்வை வலியாய் உணர்ந்திருந்தேன் சொல்லாமலே செல்லாமலே தேடி வந்தவரே உம் தோள்களில் தூக்கி சுமந்தவரே என் காயங்கள் யாவையும் ஆறசெய்தவரே என் பாரங்கள் ஏற்றுக் கொண்டவரே
குற்றம் உணர்ந்தேனே குயவன் வணைந்தீரே புதிதாய் இனிதாய் என் வாழ்வினையே உலகம் வெறுத்தேனே உறவாய் இணைந்தீரே உயிராய் வழியாய் அமைந்தவரே தள்ளாமலே செல்லாமலே என்னோடு இருப்பவரே எந்நாளுமே உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் என் ஆவலும் என் காவலும் என்றும் நீர்தானே என் காதலும் கண்ணாளனும் நீரே