உங்க கிருபையினாலே
unga kirubaiyinaalae
உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன் உங்க இரக்கத்தாலே நிலை நிற்க்கிறேன் நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே
கோடி நன்றி ஐயா நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்
கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில் கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீர் பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றினீரே மகிழ்வித்து நடத்தினீரே
யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில் தாங்கியே தப்புவித்து நடத்தினீரே உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை உன்னதத்தில் நிறுத்தினிரே