உந்தன் சித்தம் என்னிலே
undhan sitham ennilae
உந்தன் சித்தம் என்னிலே எந்தன் இஷ்டமும் அதுவே என்றும் உம்முன்பில் நிற்க (என் கலங்கம் நீக்கிடும்) நித்திய நாட்களிலே
காரிருள் தாழ்வினிலே நான் நடந்து செல்கையில் - 2 வசனமாம் வெளிச்சமாய் அருகினில் நடந்திடும் அற்புதர் இயேசுவன்றோ - 2
வாழ்க்கையின் மேடுகளில் தளர்ந்து நான் தயங்குகையில் - 2 கைகள் பிடித்தெந்தன் கால்கள் வழுவிடாதென்னை நடத்திடுமே - 2
நீதியின் வெண் வஸ்திரம் வாழ்க்கை முடிந்த பின்னே ( ஓட்டம் ) - 2 ஜீவகிரீடமும் நித்திய சந்தோஷமும் ஏழை யென் ஆறுதலே - 2
கலங்கிடும் வேளையிலே கண்ணீரின் பாதையிலே - 2 கரம் கொண்டு தூக்கிடும் கரையினில் சேர்த்திடும் கர்த்தர் நீர் இயேசுவன்றோ- 2