உணவாக வந்து எங்கள்
unavaaga vandhu engal
உணவாக வந்து எங்கள் உயிர் காக்கும் தெய்வமே ( 2 ) பிறர் வாழவே எம்மை பலியாக்கவே உளம் வாருமே உந்தன் பலம் தாருமே உணவாக வந்து எங்கள் உயிர்காக்கும் தெய்வமே - 2
1. பாலைவன பூமியிலும் தானே னன்னே . பசியால் வாடாம் தானே னன்னே பாங்கோட காத்து வந்த தெய்வமல்லவா - 2 ஆசையோட உன் வார்த்தை தானே னன்னே கேக்க வந்த சனங்களெல்லாம் தானே னன்னே . அப்பங்களை பகிர்ந்து கொள்ள ஆசி தந்தவா - 2
2. வேர்வை சிந்தி பாடுபட்டும் தானே னன்னே வெந்த சோற காணாம தானே னன்னே . வேதனையில் வாடும் மக்கள் ஏராளமே - 2 சோர்வு நீங்கி இந்த மக்கள் தானே னன்னே சோகம் போக்கும் மருந்தாகி தானே னன்னே சேர்ந்து நிக்க துணிவு தரும் மருந்தாக வா - 2
3. உயர்ந்தவங்க தாழ்ந்தவங்க தானே னன்னே ஏழை பணக்காரரென்ற தானே னன்னே வேறுபாட்டின் வேரறுக்கும் தெய்வ விருந்து உறவெல்லாம் உண்மையாகி தானே னன்னே . நேசமெல்லாம் நெசமாகி தானே னான்னே உள்ளமெல்லாம் மகிழ வேணும் பகை மறந்து