உன் புகழைப் பாடுவது
un pugazhaip paaduvadhu
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா
துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய் அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2
பல்லுயிரைப் படைத்திருப்பாய் - நீ என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும் - நீ என்னையும் ஏன் அழைத்தாய் ( 2 ) அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்