உம்மையன்றி இந்த உலகத்தில்
ummaiyandri indha ulagathil
உம்மையன்றி இந்த உலகத்தில் எங்கு நான் போவேன் எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே எனக்காக யாவையும் செய்பவர் நீர் இருக்க எந்தன் வாழ்வில் எல்லாம் நீர்தானே
பல்லவி
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே உன்னதரே இயேசு நாதா
காடு மேடு தாண்டி நான் நடந்த போது உம் கரம் பிடித்து என்னை நடத்தி சென்றீரே வழிகளில் இருள்களால் என்னை சூழ்ந்த போது வெளிச்சமாய் நீர் வந்து என் பாதை காட்டினீர் நீர் வந்ததாலே எந்தன் வாழ்வில் எல்லாம் கிடைத்ததை உணர்ந்து உம்மை துதிக்கிறேன்
பல்லவி
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா
தனிமையில் கிடந்தேனே வெறும் கையாய் நடந்தேனே இரு பரிவாரங்களால் ஆசீர்வதித்தீரே அநேக ஜாதிகள் தகப்பனாய் என்னையும் உயர்த்தி வைத்தீரே உம்மை துதிக்கிறேன்
பல்லவி
நல்லவரே வல்லவரே அடைக்கலமே ஆதரவே உயர்ந்தவரே சிறந்தவரே! உன்னதரே இயேசு நாதா