உம்மையே நம்பின
ummaiyae nambina
உம்மையே நம்பின எனக்கு அடைக்கலமும் புகலிடமும் நீரே உம்மையே சார்ந்த எனக்கு கேடகமும் துருகமும் நீரே நம்பினோரை கைவிடிரே நல்லவர் நீர் மாறிடிரே
தாங்குவீர் என்றும் நடத்துவீர் என்றும்
தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும் இருளின் காலங்களில் துணையாயிரும் உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன் நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன்
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல் விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும் எதிரான தூஷணங்களை அவமாக்கிடும் எதிர்காலங்களை உருவாக்கிடும்