உம்மைக் காண எந்தன்
ummaik kaana endhan
உம்மைக் காண எந்தன் உள்ளம் ஏங்குதே உலகம் யாவும் உம் வரவை நாடுதே
குருவே ரபியே போதகரே எங்கள் ராஜாவே
1. காலத்தை பாவத்திலே செலவழித்தேன் சாபத்தின் வாழ்வினிலே மூழ்கிவிட்டேன் பாவிகளை இரட்சித்திட பரமனே வாருமைய்யா
2. நேசத்தை நெஞ்சத்திலே விதைத்தவரே பாசத்தை பூமியிலே பொழிந்தவரே புது வாழ்வு காத்திட புண்ணியரே வாருமைய்யா
3. நோயால் வாடும் போது சுகம் தருவீர் நோக்கி உம்மை வேண்டுகிறேன் நலம் தருவீர் ஆரோக்கியம் தந்திடவே இயேசுவே வாருமைய்யா