உம்மை போல யாருண்டு
ummai pola yaarundu
உம்மை போல யாருண்டு என்னை தேற்றிட என்னை காத்திட உம்மை போல யாருண்டு வழி நடத்திட, அரவணைத்திட️
நீர் நல்லவர் நல்லவரே நீர் வாக்குமாறாதவர் நீர் பெரியவர் பெரியவரே நீர் கனத்திற்கு பாத்திரர்
கண்ணீரின் நேரத்தில் என்னை தேற்றினது உங்க கிருபை கலங்கி நின்ற நேரத்தில் அரவணைத்தது உங்க கிருபை ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை உயர்த்தி வைத்தீரே தள்ளாடிடும் நேரத்திலே உம் கரம் கொடுத்தீரே
தனிமையில் இருந்த போது தேற்றினது உங்க கிருபை எதிர்பாரா நேரத்தில் எனக்கு உதவினது உங்க கிருபை தனிமையின் நேரத்தில் நீர் துணையாய் வந்தீரே பாவியான என்னையும் உந்தன் அல்லையில் வைத்தீரே