உம்மை நோக்கி பார்த்த
ummai nokki paartha
உம்மை நோக்கி பார்த்த முகங்கள் - இயேசைய்யா வெட்கப்பட்டு போனதில்லை உண்மை தேடும் மனிதருக்கெல்லாம் - இயேசைய்யா நன்மை என்றும் குறைவதில்லை
1.கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் உனக்காக யாவையும் செய்வார் சத்திய தேவன் உண்டு மாறாத வார்த்தை உண்டு சத்துரு ஒருநாளும் ஜெயிப்பதில்லையே
2.நடப்பது எல்லாமே நன்மை என்றெண்ணி நாள்தோறும் இயேசுவை நீ துதித்திடுவாய் ஆட்டு குட்டி இரத்தம் உண்டு சாட்சியின் வசனமுண்டு ஆதலால் ஒருநாளும் தோல்வியில்லையே
3.சத்துரு வெள்ளம்போல் எதிரிட்டு வந்தாலும் ஆவியானவரே ஜெயம் தருவார் யூதாவின் இராஜசிங்கம் இயேசுவின் நாமத்தினால் ஜெயமாய் எந்நாளும் வாழ்ந்திருப்பேனே
4.அழைத்த தேவன் உண்மையுள்ளவர் அனுதினம் அன்போடு நடத்திடுவாரே சத்திய சபை உண்டு ஜெபிக்கும் ஊழியருண்டு சாத்தான் ஒருபோதும் ஜெயிப்பதில்லையே