உம்மை கொடுத்து என்னை மீட்டீரே
ummai koduthu ennai meetteerae
உம்மை கொடுத்து என்னை மீட்டீரே நான் என்ன கொடுத்து உம்மை சேருவேன் கரம் நீட்டி அழைத்த தெய்வமே இந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே .
1. ஒத்தையாய் நிக்கும் போதும் பெத்தவனை போல என்னை பத்திரமா காத்தது நீங்கதானையா எத்தனை தூரம் நான் உம்மை விட்டு போனாலும் அத்தனை தூரமும் தேடி வந்தவரே நன்மை ஒன்றும் என்னில் இல்லையே நான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவே ஒன்றும் இல்லா எந்தனுக்காக உம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே .
2. பித்தான மனதோடு நித்தம் நித்தம் அழுத எந்தன் சத்தம் கேட்டு வந்தது நீங்கதானையா அர்த்தமில்லா அலைந்த என் சுத்தமில்லா வாழ்க்கையை சுத்தமாய் மாற்றிடவே இரத்தம் கொடுத்தவரே .
நன்றி பாடல் நானும் பாடுவேன் உம் நன்மைகளை சொல்லி புகழுவேன் ஜீவனுள்ள நாட்களிளெல்லாம் என் ஜீவனே நான் உமக்காய் வாழுவேன் .