உம்மை ஆராதிப்பேன் உம்பாதம்
ummai aaraadhippen umbaadham
உம்மை ஆராதிப்பேன் உம்பாதம் பணிந்திடுவேன் உமக்கு விருப்பமான எல்லாம் செய்திடுவேன்
1. இந்தநாள் நீர் தந்தது இன்று அகமகிழ்வேன் சபையோடு சேர்ந்து சங்கீதம் பாடி சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
2. உம்மோடு உறவாடிட ஓடோடி வந்தேன் இங்கே வசனத்தின் வழியாய் என்னோடு பேசி இன்றும் நடத்திடுமே
3. வாரத்தின் முதல் நாளிலே உயிரோடு எழுந்தவரே இப்போதும் எங்களின் திருசபை மக்களை உயிர்ப்பித்து அனலாக்கிடும்
4. நிகரே இல்லாதவர் நினைவாய் இருக்கின்றீரே தடுமாறும் நேரம் தாங்கிப்பிடித்து தயவாக நடத்துகின்றீர்