உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
ummaalae oru senaikkul paayven
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் - 2
சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன் சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா உம்மை பாடி துதித்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
1.நான் நம்பின மனிதர் எல்லாம் எனக்கெதிராய் எழும்பி வந்தாலும் - 2 தாங்குவீர் என்னை தப்புவிப்பீர் புது வழி எனக்காய் திறப்பீர் - 2
2.சிங்கத்தின் குகையில் என்னையும் தூக்கி போட்டாலுமே - 2 யூத ராஜா சிங்கம் என்னோடிருப்பதனால் ஜெயித்திடுவேன் முன்னேறிடுவேன் - 2
3.பெரும்வெள்ளம் மதிலை அடித்தாலும் பெருங்காற்று படகை அசைத்தாலும் - 2 உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்யும் உன்னத தேவன் என்னோடுண்டு - 2